Monday, September 21, 2009

Child Malnutrition in India - ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள்
















நாள் ஒன்றுக்கு பத்து இந்தியரை பலிவாங்கும் Swine Flu விற்கு நம் தினசரி செய்தித்தாள்களும்..தொலைக்காட்சி செய்திகளும் கொடுக்கும் முக்கியத்துவம்..தினமும் 3000க்கும் மேற்பட்ட இந்தியக் குழந்தைகளை பலிவாங்கும் ஊட்டச்சத்து குறைவின்மைக்கு ஏன் கொடுப்பதில்லை என்று யோசித்ததுண்டா?

இந்த Child Malnutrition பிரச்சனையைத் தீர்க்க ஏழு வழிகளை Lawrence Haddad என்பவர் The Hindu வில் எழுதியிருக்கிறார். அதிலிருந்து;

So what should be done? First, fund communities and local governments to undertake social audits of the ICDS services actually delivered. Let the ultimate customers rate the provision and make the results public. This will put pressure on local MPs and local providers.

Second, give the Comptroller and Auditor-General a bigger role in monitoring government action on nutrition. Their work is already cited by many, and they should be empowered to do more.

Third, simplify ICDS. There are too many interventions and too many age groups. It is complex to run, especially given the thousands of different contexts it has to adapt to. At the moment it tries to be all things to all people and runs the risk of satisfying none.

Fourth, find an effective cross-ministry mechanism to deliver food, care and health in combinations that work. Efforts to lift the curse of malnutrition must be unified.

Fifth, historically excluded groups must be involved in the design, outreach and delivery of nutrition programmes, reaching out to women from these groups in particular.

Sixth, introduce simpler but more frequent monitoring of nutrition status so that civil society and the media can hold the government and non-state actors to account for year on year slippage and reward them for progress.

Finally, develop new ways of teaching and doing research on how to improve nutrition. Reducing malnutrition is not just about health, agriculture and economics. It is also about politics, governance and power.

********

ஊட்டச்சத்து குறைவைப் பற்றி எந்த ஒரு விவாதமும் இந்தியாவில் நடைபெறுவதில்லை. எந்த அரசியல்வாதியும் இதைப்பற்றிப் பேசுவதில்லை...இவை ஓட்டுக்களைப் பெற்றுத்தரப்போவதும் இல்லை..பொதுமக்களாகிய நமக்கும் இதைக்குறித்து எந்த விதப்பிரக்ஞையும் இல்லை. டெல்லியில் சில கூட்டத்தைக்கூட்டி விவாதிப்பதுடன் அதிகாரிகளின் கடமையும் முடிந்துவிடுகிறது. நாளைய இந்தியாவை உருவாக்கப்போகும் இளைய தலைமுறையைக் காலனிடம் கொஞ்சம் கொஞ்சமாகத் தூக்கிக்கொடுத்துவிட்டு...வல்லரசு இந்தியாவை உருவாக்குவோம் என்று கனவு காணுவது அறிவீனம்!

இதைப்பற்றி 2007 ல் எழுதிய பதிவு : ஊட்டச்சத்தில்லாத குழந்தைகள்(child malnutrition ).


Saturday, September 12, 2009

புத்தகம்: Writing A Nation ( An Anthology of Indian Journalism)


Writing A Nation: An Anthology of Indian Journalism.

Author: Nirmala Lakashman (Joint Editor, The Hindu)

Price: Rs 684. Page: 711. Publisher: Rupa & Co

இந்தப் புத்தகத்தை 2007 ல் சென்னையில் வாங்கினேன். ரொம்ப நாட்களாக இந்தப்புத்தகத்தைக் குறித்து எழுதவேண்டும் என்று நினைத்து இன்றுதான் வாய்த்திருக்கிறது. இந்தப்புத்தகத்தைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமானால் " Treasure" என்று சொல்லிவிட்டுப்போய்விடலாம்.

இந்த நூலில், இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பின், இந்தியப் பத்திரிக்கை சுதந்திரத்தைப் பறைசாற்றும் விதமாக, இந்தியப் பத்திரிக்கைகளில் வெளிவந்த பல்வேறு தலைப்பிலான கட்டுரைகள், இந்து பத்திரிக்கையின் துனை ஆசிரியர் நிர்மலா லக்‌ஷ்மன் அவர்களால் தொகுக்கப்பட்டுள்ளது. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது அம்பேத்கர் அதைப்பற்றி 1953ல் டைம்ஸ் ஆப் இந்தியாவில் எழுதிய கட்டுரையில் தொடங்கி..2004ல் ராமச்சந்திர குஹா எழுதிய "Why India Survives" என்ற கட்டுரைகள் வரை பல்வேறு தலைப்பில் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளது.
  1. Constructing Democracy
  2. Nurturing A Free Press
  3. A Divided Society
  4. Corruption and Culpability
  5. India and the world
  6. A Wealth of Spirit
என்ற ஆறு தலைப்புகளில், இந்திய பத்திரிக்கைகளான இந்து,இந்தியன் ஏக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ், இந்தியா டுடே, டெலிகிராப் போன்ற பத்திரிக்கைகளில் வெளியான, பல்வேறு அறிவுஜூவிகள், அரசியல் தலைவர்கள், பத்திரிக்கையாலர்கள் எழுதிய 140 கட்டுரைகள் இந்தப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தப்புத்தகத்தை உருவாக்க காரணமாக, ஜான் பில்ஜர் என்ற பிரபல பத்திரிக்கையாளர் தொகுத்த "Tell Me No Lies" என்ற புகழ் பெற்ற புத்தகம்தான் காரணம் என்கிறார் நிர்மலா லக்‌ஷ்மன். இந்தப் புத்தகத்தையும் படித்துவருகிறேன். இந்தப்புத்தகத்தைப் பற்றியும் அவசியம் எழுதவேண்டும்..பொறுமையாக பிறகு எழுதுகிறேன்.

இப்புத்தகத்தைப் பற்றி பத்திரிக்கைகளில் வெளிவந்த சில செய்திகள் இங்கே:

Excerpts from the Introduction to Writing a Nation: An Anthology of Indian Journalism, edited by Nirmala Lakshman

Writing a Nation — an Anthology of Indian Journalism by Nirmala Lakshman was released on Wednesday by Vice-President Hamid Ansari. Lakshman, Joint Editor of The Hindu, traces the themes that defined national discourse from the days of Independence, seen through the English press. Anubhuti Vishnoi spoke to Lakshman about the book, the media and what she’s working on next.

இந்தியாவைப் பற்றி வெளிவந்த கருத்துச் செறிவுள்ள புத்தகங்களில் ”Writing A Nation: An Anthology of Indian Journalism.” முக்கிய பங்குவகிக்கும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை..சுதந்திரத்திற்க்குப் பிறகான இந்தியாவை,பத்திரிக்கைகளில் வெளிவந்த கட்டுரைகள் வாயிலாகப் படிக்கவிரும்புபவர்கள் இதை வாசிக்கலாம்.

Friday, September 11, 2009

இன்று பாரதியின் நினைவு நாள் (11/09/09)


எண்ணிய முடிதல் வேண்டும்,
நல்லவே எண்ணல் வேண்டும்,
திண்ணிய நெஞ்சம் வேண்டும்,
தெளிந்த நல்லறிவு வேண்டும்,
பண்ணிய பாவமெல்லாம்
பரிதிமுன் பனியே போலே,
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திட வேண்டும் அன்னாய்!

*****************************

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் - எங்கள்
இறைவா! இறைவா! இறைவா!



Monday, September 07, 2009

அடிக்கிறகைதான் அணைக்கும்!


”அடிக்கிறகைதான் அணைக்கும்” என்னும் பாடல் வரிகளுக்கு நம் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதாக எனக்குத் தோன்றுகிறது. கடந்த சிலநாட்களில் படித்த இரண்டு வெவ்வேறு செய்திகள் இதை எழுதத்தூண்டியது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செங்கோடிபுரம் என்னும் கிராமத்தில், கடந்த 60 வருடங்களாக வாழ்ந்துவரும் 56 தலித் குடும்பங்களை வெளியேற்றும்படி தர்மபுரி முனிசிபாலிட்டி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றி உத்திரவு பிறப்பித்திருக்கிறது. இந்த 56 தலித் குடுப்பங்களும் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட காலனியில் குடியேற்றப்பட்டவர்கள்.

4.76 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த காலனியில்..4.23 ஏக்கர் நிலம் தர்மபுரி காஸ்மோபாலிட்டன் க்ளப்பிற்கும், இதர சாதி இந்துக்களுக்கும் சொந்தமாக பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும்..தலித் மக்களுக்கு இதுவரை எந்த பட்டாவும் வழங்கப்படவில்லை என்றும் இந்துவின் செய்தி கூறுகிறது. இது செப்டம்பர் 2ஆம் தேதி வெளிவந்த செய்தி.

செப்டம்பர் 5ஆம் தேதி வெளிவந்த ஒரு செய்தி தலித் மக்களுக்கான நல்வாழ்வு திட்டங்களைச் செயல்படுத்த தமிழக அரசு 138.76 கோடி ரூபாய் வழங்கியிருப்பதாக சொல்கிறது. இத்திட்டத்தின் மூலம் 1,16,800 தலித்மக்கள் பயனடைவார்கள் என்றும்..இத்திட்டம் The Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation (THADCO) மூலம் நிறைவேற்றப்படும் என்றும் இந்துவின் செய்தி சொல்கிறது.

இந்த இரண்டு செய்திகளையும் படித்தபோது...தர்மபுரி முனிசிபாலிட்டி நிர்வாகத்தின்மேல் அடக்கமுடியாத கோபம் வந்தாலும் ..தமிழக அரசின் செயலை நினைத்து திருப்தி அடைவதைத் தவிற வேறு வழியில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. அதோடு ”அடிக்கிறகைதான் அணைக்கும்” என்ற பாடல் வரியையும் நினைத்துக்கொள்கிறேன்.