Tuesday, August 31, 2010

Book Review - Plain Speaking: A Sudra’s Story

"Plain Speaking: A Sudra’s Story"-A.N.Sattanathan



தமிழக அரசியலை ஓரளவு பின்தொடர்பவர்களுக்கு இந்தப் புத்தகத்தை எழுதியவரை அறிமுகம் எதுவும் செய்யத்தேவையில்லை என்று நினைக்கிறேன். இவர் கொடுத்த அறிக்கையின் ஒரு பகுதியை செயல்படுத்திய எம்.ஜி.ஆர், அடுத்து வந்த நாடளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்தார். இவர் மெட்ராஸ் பிரசிடென்சியின் Collectorate of Salt Revenue and Central Excise(1942-44) இருந்தபோது உருவாக்கிய எக்ஸைஸ் வரிவிதிப்பு முறை இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. தற்போது ஒரு ஐந்தாறு வருடங்களாக இடப்பங்கீடு தொடர்பான விவாதங்களில் அதிகம் புழங்கப்படும் Creamy Layer என்ற வார்த்தையை 1969களிலேயே Upper Crust என்ற பதத்தில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைத் (Tamil Nadu Backward Classes Commission) தலைவராக இருந்தபோது இவர் சமர்ப்பித்த அறிக்கையில் பயன்படுத்தியுள்ளார் . இவர் பெயர் சட்டநாதன்.

தென்தமிழ்நாட்டில், செங்கோட்டை என்னும் ஊரில், வறுமைவாய்ந்த, மிகவும் பிற்படுத்தப்பட்ட படையாச்சி என்னும் சாதியில் பிறந்த சட்டநாதன் அவர்களால் ஒரு குயர் நோட்டில், 48 வருடங்களுக்கு முன்பு எழுதிவைத்திருந்த அவரது சிறுவயது வாழ்க்கைக் குறிப்புகள்தான்(Memoirs) இந்தப் புத்தகம். இதைத்தான் அவருடைய பேத்தி, உத்ரா நடராஜன் அவர்கள், Plain Speaking: A Sudra’s Story என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள். இதுபோக இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் திராவிட இயக்கத்தைப் பற்றியும், தமிழ்நாட்டில் உள்ள சாதிகளைப் பற்றி ஆற்றிய மூன்று உரைகளும் தொகுக்கப்பட்டுள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில பிறந்த சட்டநாதன்(1905) தன் குடும்ப அமைப்பில் ஆரம்பித்து, தன்னுடைய பள்ளி,கல்லூரி வாழ்க்கையைப் பற்றிச் சொல்லி, தன்னுடைய இரண்டாவது வேலையில் சேர்வதோடு( 1928) இந்தப் புத்தகம் abrupt ஆக நிறைவடைகிறது. இவர் ICS(IAS) படிக்க ஆசைப்படுவதும், அதற்காக வறுமையிலும் எப்படியெல்லாம் கடினமுயற்சி எடுத்தார் என்பதைப் பற்றி புத்தகத்தில் சொல்லிக்கொண்டே வருவார்.ஆனால் தீடீரென இரண்டாவது வேலையில் சேர்வதோடு அவரது குறிப்புகள் நிறைவுபெறும். படிக்கும்போது மிகவும் கஷ்டமாக இருந்தது.

தன் குடும்பத்தைப் பற்றிச் சொல்லும்போது “பெண்கள் நிறைந்த வீடு” (A House of Woman) என்கிறார். முதல் அத்தியாயதிலேயே தன் குடும்ப வறுமையை இப்படி சொல்லிவிடுகிறார்.

” Family records have no place among poor”.

இவருடைய தந்தை ஒரு இசைக் கலைஞர் மற்றும் விவசாயி. தன் தந்தை மிகவும் கண்டிப்பானவர் என்றும் தன் மகன் ஆங்கிலம் கற்று ஒரு அரசாங்க ஊழியனாகவோ அல்லது ஆசிரியராகவோ ஆகவேண்டும் என்று விரும்பியதாகச் சொல்கிறார். அதற்காக அவர் படும் கஷ்டங்களை படிக்கும் போது நெகிழவைக்கிறார். தன் கல்விக்காகத் தன் ஊர்பெரியவரின் உதவியை நாடும் இவர்..அந்தப் பெரிய மனிதர் குடும்பத்தினரை மகிழ்விக்க அவருடைய இயற்பெயரான முத்தையாவை மாற்றி சட்டநாதன் என்ற பெயர் இடப்பட்டதாகச் சொல்கிறார். தன் வறுமையையும் சமூக நிலையையும் பற்றிச் சொல்லும்போது இப்படிக் குறிப்பிடுகிறார்.

” In those days I seldom wore shirt. I had only my loincloth, and even if I had the customary towel which people carry on their shoulders, I was not expected to put it on my shoulders or cover my body with it.It had to be tied round the waist or carried on the arm. Otherwise it would indicate lack of respect and I stood the risk of being chastised.I never took that risk.No one would ask me to sit on the benches generally provided in the verandahs, and to sit unasked would have been a crime.Standing for hours together, often on an empty stomach, could never be pleasant experience for a boy”.

பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் திருவணந்தபுரத்தில் உள்ள கல்லூரியில் சேர்ந்து பி ஏ பட்டமும்..அதே கல்லூரியில் ஹானர்ஸ் பட்டமும் பெறுகிறார்..அந்தக்காலக் கல்லூரி மற்றும் சமூக வாழ்க்கை பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளமுடிகிறது..உதாரணமா ஒன்னு...

“In the College unions and other associations, english was the only medium of speaking. We never had any one speaking to us in Tamil, and for students to have discussions in Tamil was unprecedented.”


“We Visited this temple occasionally. Admission was easier,but non-brahmans were not permitted to enter beyond a certain limit. From where we stood, we could, however,see the sanctum and the performance of the pooja by the priest. But what irritated us in this temple was the priest would not give the prasad-the sandal paste or holy ash-in our hands. He would throw it on a stone and the non-brahman devotees had to pick it up”

கல்லூரியில் தனக்கு அனைத்து விரிவுரையாளர்களும் குறிப்பாக திரு.கிருஷ்னமாச்சாரி அவர்கள் பெரும் உதவிபுரிந்ததாகச் சொல்கிறார். தன்னுடைய ICS படிக்க வேண்டும் என்ற கனவை யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்ததாகச் சொல்கிறார். படித்து முடித்தவுடன் அரசாங்க க்ளர்க் உத்தியோகத்தை நிராகரித்துவிட்டு கல்லூரி ஆசிரியர் பணியில சேர ஆசைப்பட்டதாக குறிப்பிடுகிறார். மதுரையில்(Madura) கல்லூரி ஆசிரியர் வேலையில் மாதம் 80 ரூபாய் சம்பளத்தில் சேரும் இவர்..அங்கிருந்தே ICS படிப்பிற்கு விண்ணப்பிக்கிறார். ஆசிரியர் உடுத்த வேண்டிய உடைகள் எதுவும் இல்லாமல் அவதிப்பட்டதாகச் சொல்கிறார்.

வேலையில இருந்த சமயம், ஹானர்ஸ் படிப்பு முடித்தவர்களுக்கு லன்டன் சென்று படிக்க மதிப்பென் அடிப்படையில் இரண்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பினையொட்டி அதற்கும் விண்ணப்பித்ததாகச் சொல்கிறார்.

“I applied for these scholarships, and was hopeful that here at least, at the higher level of Government, a first calss Honours graduate, from a very backward community,would receive encouragement.”

மதுரையில் 1 வருடம் பணிபுரிந்தவர் வேறு வேலை தேடும்படலமாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர நேர்முகத்தேர்வுக்குச் சென்றபோது மிகவும் புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியர் திரு. நீலகண்ட சாஸ்திரியை சந்தித்ததாகவும்..இவர் ICS தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருப்பதால் அந்தப் பணி தனக்கு மறுக்கப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். அதன்பின் திருச்சியில் இருந்த தனது நண்பனின் உதவியினால் நேஷனல் காலேஜில் ஆசிரியர் பணியிட வாய்ப்பு கிடைத்ததாகக் குறிப்பிடுகிறார்…(இந்த வேலை கிடைக்க நடந்த நேர்முகத்தேர்வின் உரையாடல்கள் சிரிக்கவும்,சிந்திக்கவும் வைக்கிறது).

பத்து மாதங்கள் இந்தப் பணியில் இருந்ததாகச் சொல்வதுடன் அவரது குறிப்புகள் Abrupt ஆக, ICS தேர்வைப் பற்றி எதுவும் குறிப்பிடாமல் நிறைவடைகிறது. இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் திடாவிட இயக்கம் மற்றும் அதன் வளர்ச்சி அரசியல்பற்றியும், தமிழ்நாட்டின் சாதியமைப்பை பற்றி ஆற்றிய மூன்று உரைகள் தொகுக்கப்பட்டுள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் ஒரு மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் பிறந்த மனிதர்களின், சமூக,பொருளாதார நிலை மற்றும் வாழ்க்கை முறை பற்றி தெரிந்துகொள்ள விரும்புவர்கள் இந்தப் புத்தகத்தை சிறிதும் தயக்கமின்றி வாங்கலாம். குறிப்பாக இடஒதுக்கீட்டை எதிர்க்கும் இளைய தலைமுறையினருக்கும், Creamy Layer ( “Upper Crust” as per Sattanathan) பற்றி கிஞ்சித்தும் கவலைப் படாத அரசியல்வாதிகளும் இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம். இந்தப் புத்தகத்தை பதிப்பாளர்கள் யாரவது தமிழில் மொழி பெயர்த்தால் நானே 25 புத்தகங்கள் வாங்கி யார்தலையிலாவது கட்டத் தயார்.

கடைசியாக சட்டநாதன் அவர்களின் உரையிலிருந்து இடஒதுக்கீட்டைப் பற்றி 1970களில் கூறியது ஒரு குறிப்பு மட்டும் இங்கே

”There are two tendencies which have become noticeable. Reservation has helped the backward classes for nearly three decades from the 1920s to the 1980s - nearly three generations. The benefit of reservation has gone mostly to the few top castes amongst the backward, and to an increasing layer of upper crust in each caste. The filtration process has not been thorough or uniform. This is not surprising and to some extent unavoidable. It would be a step in the larger interests of society and of the backward classes themselves if a check is applied to both these tendencies. There has been thinking on these lines among administrators but the opposition of vested interests has been too strong to carry out the necessary pruning. But sooner or later the removal of two kinds of upper crust will become unavoidable, otherwise we will be encouraging the castes to form a class system within class system - not altogether desirable trend in a democratic and socialistic society.”

இவர் கூறியது பலிக்கும் என்று நம்புவோம்.

Book: PLAIN SPEAKING: A Sudra S Story
Author: A. N. Sattanathan, Editor: Uttara Natarajan
Publisher: Permanent Black
Number of Pages: 245
Language: English
Price: Rs.395

குறிப்பு: இது ஒரு புதுப்பிக்கப்பட்ட மீள்பதிவு:P