Showing posts with label மொகலாயர்கள். Show all posts
Showing posts with label மொகலாயர்கள். Show all posts

Thursday, August 13, 2009

மொகலாய அரசியலும்..சமகால அரசியலும்!


The Mughal World புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தபோது சமகால அரசியல் நிகழ்வுகளோடு ஒத்துப்போகும் சில அரசியல் நிகழ்வுகள் சிலவற்றை வாசித்தேன். அதைப்பற்றிய சில குறிப்புகள்.

மொகலாயப் பேரரசில் மன்னரின் மூத்தமகனுக்கே பேரரசராக முடிசூடப்படும் வழக்கம் இருந்துவந்துள்ளது. சமகால அரசியலில் எனக்கு இங்கே நினைவிற்கு வந்த பெயர்கள் ..நவீன் பட்நாயக், குமாரசாமி, உமர் அப்துல்லா, ராகுல் காந்தி
( பேரரசர் இன் வெயிட்டிங்) ஆகியோர். கொஞ்சம் பின்னோக்கிச் சென்றால் நினைவுக்கு வருவது..சஞ்சய் காந்தி.அவருக்குப்பின் ராஜீவ், பரூக் அப்துல்லா, பிஜூ பட்நாயக்.

தற்போது உள்ள அனைத்து அமைச்சுப் பெருமக்களும் குறுநில மன்னர்கள்தாம்..அந்தவகையில் பார்த்தால் ஏகப்பட்டபேர் இந்த லிஸ்டில் தேறுவார்கள்..சுறுக் லிஸ்ட்: மாதவராவ் சிந்தியா--> ஜோதிராத்ய சிந்திய..ராஜேஷ் பைலட்--> சச்சின் பைலட்..பால் தாக்ரே---> உத்தவ் தாக்ரே..முரளி தேவ்ரா---> மிலிந் தேவ்ரா..சரத்பாவருக்கு ஆன் வாரிசு இல்லை அதனால்..அவரின் மகள் சுப்ரியா சூலே. ( இந்த லிஸ்ட்டில் இன்னும் நிறைய உருப்படிகள் தேறும்..அதுவும் மாநில அரசியலில் ஏகப்பட்டது தேறும்.. யோசிக்க நேரம் இல்லை..மிஸ்ஸான மினிஸ்டர்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்..இங்கே சேர்த்து விடுகிறேன்.

சிலசமயம் மொகலாய அரசியலில் அண்ணன்,தம்பிக்கு இடையே அரசாட்சியை குறிவைத்து பெரும் போர் மூழுமாம். காதல் மன்னன் ஷாஜகான் கூட தன் சகோதர..சகலப்பாடிகளை எல்லாம் கொன்றுவிட்டுத்தான் அரியனையைக் கைப்பற்றினாராம். பாபரும், ஹுமாயுனும் தன்னுடைய ஆட்சிக்காலத்திற்குப் பிறகு தன் வாரிசுகளுக்கிடையே அரசர் பதவிக்குப் போர்வரமல் தடுக்க..தனது சமஸ்தானங்களை (Kingdom?) மகன்களுக்குப் பிரித்துக்கொடுத்தார்களாம். அவர்கள் எழுதிவைத்த குறிப்பு எதையும் கலைஞர்.கருணாநிதி படித்தாரா என்று தெரியாது..ஆனால் பக்காவாக சமஸ்தானங்களைப் மூத்த மகன் அழகிரிக்கும்..இளைய மகன் ஸ்டாலினுக்கும் பிரித்துக்கொடுத்துவிட்டார். ஒளரங்கசீப் தன்னுடைய உயிலில் தன் சமஸ்தானத்தை அனைத்து மகன்களும் சமமாகப் பிரித்துக்கொள்ளவேண்டும் என்று விரும்பம்தெரிவித்திருந்தாராம்..ஆனால் அவரின் மகன் மூஜாம் வாரிசுப்போரில் வென்றது தனிக்கதை!

ஏறக்குறைய அனைத்து மொகலாய அரசர்களும் தத்தமது மகன்களின் எதிர்ப்பை எதிர்கொள்ளவேண்டியிருந்ததாம்..அக்பர்,ஜகாங்கீர்,ஷாஜகான்,ஒளரங்கசீப் இதில் அடக்கம். நம் வரலாற்றுப் பாடப்புத்தகதில் நல்லமனிதராகச் சித்தரிக்கப்படும் அக்பர்கூட அரசர் பதவியைப் பாதுகாக்க தன்னுடைய உறுவினன் அபுல் கசிம் என்பவரை கொன்றாராம். ஷாஜகானின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவுசெய்த முகம்மது சாலிக் கம்பு இப்படிச் சொல்கிறார்..” It is enitirely lawful for great sovereigns to rid this mortal world of the existence of their brothers and other relations, whose anihilation is conducive to the common good". இதைப் படிக்கும் போது எனக்கு இங்கே கொஞ்சம் ஸ்லைட்டா தயாநிதிமாறன்...மதுரை தினகரன் ஆபீஸ் எரிப்பு..இரண்டு பேரை உயிருடன் எரித்துக் கொலை செய்தது எல்லாம் நியாபகத்திறகு வந்தது!

Tuesday, August 11, 2009

மொகலாயர்களின் Bureaucracy.


மொகலாயர்களின் ஆட்சிக்காலத்தின் போது அரசாங்கப் பணிக்கு ஆட்களை நியமிக்கும் முறை ( bureaucracy ) குறித்து அக்பரின் அரசியல் ஆலோசகராக பணியாற்றிய அபுல் பசலின் குறிப்புகளில் இருந்து ;

1. அரசாங்கப் பணிக்கு அரசர் ஒருவரை நியமிக்கும் போது அந்த ஆணை முதலில் அரசவைக்குறிப்பில் பதியப்படுகிறது.

2. அதன்பின் இந்த அரசவைக்குறிப்பு சிலரால் சரி பார்க்கப்பட்டு பணிநியமன ஆணை தயாரிக்கப்படுகிறது.

3. இந்தப் பணிநியமன ஆணை மூன்று அரசாங்க அலுவலர்களால் தனித்தனியே சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்படுகிறது.

4. அதன்பின் இந்த ஆணை நகல் எடுக்கும் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டு அங்கே பணிநியமன ஆனையின் சுருக்கமான வடிவம் தயாரிக்கப்படுகிறது. இந்த வடிவம் நான்கு வெவ்வேறு அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு உறுதிசெய்யப்படுகிறது.

5. உறுதிசெய்யப்பட்ட ஆணை, அமைச்சர் ஒருவரால் சீல் செய்யப்பட்டு ரானுவ அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு பணிவிபர அறிக்கை தயார் செய்யப்படுகிறது.

6. இந்த பணிவிபர அறிக்கையை சமர்ப்பித்தவுடன், ஊதிய அறிக்கை தயார் செய்யப்படுகிறது. இந்த ஊதிய அறிக்கை பல ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டபின் நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்படுகிறது.

7. நிதி அமைச்சகமும் தன் பங்கிற்கு பணிவிபரம் மற்றும் ஊதியவிபரங்களை பல ஆவணங்களில் பதிவு செய்தவுடன், தனி அறிக்கை ஒன்றை மன்னருக்கு அனுப்பி வைக்கிறது.

8. மன்னர் இந்த அறிக்கையை படித்து ஊதிய விவரங்களுக்கு அங்கீகாரம் கொடுப்பார். அதன்பின் புதிய ஊழியறுக்கான ஊதியப்படி அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

9. இந்த ஊதியப்படி அறிக்கை மறுபடியும் நிதியமைச்சர், ஊதிய ஆனைத்தலைவர் மற்றும் ரானுவ கணக்காளரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது.

10. இந்த ஊதிய அறிக்கையின் படி ரானுவ கணக்காளரால் ஊதிய ஆணை தயாரிக்கப்படுகிறது.

11. இந்த ஊதிய அறிக்கையில் வெவ்வேறு அமைச்சகத்தைச் சேர்ந்தவர்களின் ஆறு கையெப்பங்கள் வாங்கப்பட்டு அரசு கருவூலத்திற்கு அனுப்பப்படுகிறது.

12. அரசு கருவூலத்தைச் சேர்ந்த அதிகாரிகளால் ஆறு கையெப்பங்களும் சரி பார்க்கப்பட்ட்டு ஊதியம் பெறுவதற்கான ஆனை வெளியிடப்படுகிறது.

***********************

பேரரசரின் ஆனை அமல் படுத்தபட 19 அடுக்குகளைக் கடந்து செல்லவேண்டுமாம்.ஒளரங்கசீப் தன்னுடை ஆணைகள் நிறைவேற்றப்படாததைக் கண்டு அடிக்கடி மனம் வெதும்பினாராம்.

Source : The Mughal World By Abraham Eraly.(Page 250-251)

Thursday, July 02, 2009

The Mughal World : Book Review (புத்தகவிமர்சனம்)


” ஒலரங்கசீப் (ஒளரங்கசீப்) பாடம் எப்ப நடத்துவீங்க டீச்சர்”? என்று கேட்டு சாவித்திரி டீச்சரிடம் கொட்டு வாங்கிய மூன்றாம் வகுப்பின் பள்ளி நாள் இன்றும் நினைவில் உள்ளது. மொகலாய மன்னர்களின் பெயர்களை எங்கு படித்தாலும் (குறிப்பாக ஒளரங்கசீப்) சாவித்திரி டீச்சரிடம் வாங்கிய கொட்டின் நியாபகமும், சிறு புன்னகையும் தோன்றி மறையும்.

வழக்கமாக தமிழ் சினிமாவில் எப்படி வில்லனை காட்சிப்படுத்துவார்களோ, அதே போலத்தான் இன்றைய பள்ளிப் புத்தகங்களில் மொகலாய மன்னர்களைப் பற்றி எழுதிவைத்திருக்கிறார்கள். இந்த வில்லன் லிஸ்டில் இருந்து அக்பரும்,பாபரும் மட்டும் ஏனோ விலக்கி வைக்கப்பட்டுள்ளார்கள். நான் படித்தபோது மூன்றாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்புவரை படித்த வரலாற்றுப் பாடங்களில் மொகலாய மன்னர்கள் என்றாலே.. "என்ன ஒரு வில்லத்தனம்?" என்று என்னும் வகையில்தான் கற்றுக்கொடுக்கப்பட்டார்கள். வரலாற்றில் ஒரு சாரரை மட்டும் செலக்ட்டீவ் ஜட்ஜ்மெண்டலோடு( selective judgmental) கற்பதும்/கற்றுக்கொடுப்பதும் அபாயகரமானது என்பது என் தாழ்மையான கருத்து.

மொகலாய அரசுகளைப் பற்றியும், மன்னர்களைப் பற்றியும் வரலாற்று ஆசிரியர்கள் நிறைய புத்தகங்களை எழுதியிருக்கிறார்கள்..அவர்களில் அபரகாம் எராலி( Abraham Eraly) எழுதிய The Mughal World என்ற புத்தகத்தைப் படித்துவருகிறேன்.. அப்புத்தகத்தைப் பற்றியும், மொகலாய மன்னர்களைப் பற்றியும் சில சுவாரசியமான விசயத்தை பகிர்ந்துகொள்ளும் வகையில் சில பதிவுகளாக எழுத உத்தேசித்துள்ளேன்..சில வாரங்களில் எழுதி முடித்துவிட எண்ணம்.. பார்க்கலாம்.

********************

போர்ச்சுகீசியர்கள்தான் இந்தியாவிற்கு முதன் முதலில் வந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே..1498ல் வாஸ்கோடகாமா என்ற போர்ச்சுகீசியர், கேரளாவின் கோழிக்கோட்டில் வந்திறங்கினார்..அவர் வந்தபோது தான் கிருஸ்துவர்களையும், நறுமனப்பொருட்களையும் ( Christians and Spices)யும் தேடி வந்ததாக சொன்னாராம்.

*********************

(தொடரும்)