Wednesday, January 13, 2010

காஷ்மீர்: புத்தகவிமர்சனம்


”சர்வதேச ரீதியில் பிரச்சனைக்குறிய விஷயமாக அம்மாநிலம் இருக்கும்வரை, அம்மாநிலத்தில் எதிர்க்கட்சி ஒன்று வளர்க்கப்பட வேண்டும் என்ற கருத்தை நான் விரும்பவில்லை”. ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரான இக்கருத்தைச் சொன்னவர் இந்தியாவின் நம்மர் ஒன் ஜனநாயகவாதி என்று புகழப்படுகிற ஜெயப்பிரகாஷ் நாராயனன் என்று சொன்னால் உங்களால் நம்மமுடிகிறதா? ஆம்! காஷ்மீர்பிரச்சனையின் தன்மை இதைச் சொல்லவைத்தது.

“ சர்வதேச அரங்கில் காஷ்மீரை வைத்து நாம் ஒரு சூதாட்டம் நடத்திக்கொண்டிருக்கிறோம். இதில் எந்த வகையிலும் நாம் தோற்றுவிடமுடியாது; கூடாது. அதனால், காஷ்மீர் விஷயத்தில் நாம் ஜனநாயகத்தையும், நல்லொழுக்கத்தையும் சற்றே விலக்கி வைத்திருக்கலாம்” என்று அமைதிவிரும்பி நேரு அவர்கள் பால்ராஜ்பூரி என்ற நபரிடம் கூறினாராம்.

காஷ்மீரைப் பொருத்தவரையில் ஜெயப்பிரகாஷ் நாரயணன், நேரு போன்றவர்களே இது போன்ற ஏற்றுக்கொள்ளமுடியாத கருத்தைக் கூறியிருக்கும்போது, சாதரன இந்திய ஆட்சியாளர்கள் காஷ்மீர் விவகாரத்தில் என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்று யோசித்துபாருங்கள்? இந்திய அரசியல்வாதிகளும், ராணுவமும், காஷ்மீரில் செய்த அத்தனை அட்டூளியங்களை யும் இந்த புத்தகம் தொட்டுச்செல்கிறது.

காஷ்மீரின் தொடக்ககால வரலாறு, அங்கு நடந்த முக்கிய அரசியல்/சமூக நிகழ்வுகள், பிரச்சினைக்கு காரணமான அரசியல்/சதி வேலைகள் என காஷ்மீர் பிரச்சனையின் பலதரப்பட்ட பக்கங்களையும் சொல்வதோடு..உலகின் மிகப்பெரிய ஜனநாயகநாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியா, எப்படி காஷ்மீரிகளின் எந்த ஜனநாயக உரிமையையும் மறுக்கிறது என்றும் விளக்குகிறது .

காஷ்மீர் பிரச்சனையின் அனைத்துப்பரிமாணங்களையும் மேம்போக்காக அலசும் தமிழ் புத்தகம் என்று இப்புத்தகத்தைச் சொல்லலாம்.

விலை ரூ. 220.00
ஆசிரியர்: சந்திரன்
வெளியீடு: ஆழி பதிப்பகம்
ISBN: 81-907523-2-4
பக்கங்கள்: 400

கொசுறு: இந்தியா மொத்தம் 6 லட்சம் ரானுவத்துருப்புக்களை காஷ்மீரில் நிறுத்தியுள்ளது. ஒரு காஷ்மீரின் இடத்தில் இருந்து இதை யோசித்துப்பாருங்கள்? இதைப்பற்றி ஒரு காஷ்மீரி சொல்வது:

Imagine how we feel when a Bihari or a Madrasi asks us for our identity card in our own country, when we should be asking them for their papers,''




0 comments: