Sunday, August 06, 2006

விலகாத காரிருள்!

உலக மக்கள் மறக்க முடியாத; மறக்கக் கூடாத நாள் ஆகஸ்ட் 6, 1945. அன்றைய தினம் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரின் மீது ஒரு கோடி சூரியன்கள் தோன்றியதாகத் தோற்றம் காட்டி 2 லட்சம் உயிர்களைக் குடித்த அமெரிக்க அணுகுண்டு தாக்குதல் பின்னர் அந் நகரில் இருளை உருவாக்கியது. அக் காரிருள் இன்று உலகம் முழுவதையும் சூழ்ந்திருக்கிறது.

ஹிரோஷிமாவைத் தொடர்ந்து நாகசாகியில் ஆகஸ்ட் 9ம் தேதி வீசப்பட்ட மற்றோர் அணுகுண்டுக்கு இதுவரை பலியானோர் 1.40 லட்சம். இக் குண்டு வெடிப்புகளில் உடல் தீப்பற்றி எரிந்து, நுரையீரல்கள் வெடித்து இறந்தவர்கள் மட்டுமன்றி கதிரியக்கத்தால் புற்றுநோய், மூளைக் கட்டிகள் ஏற்பட்டு தொடர்ந்து வந்த ஆண்டுகளில் பலர் இறந்தனர்.
இறந்தவர்களைக் கண்டு பொறாமைப்படும் அளவுக்கு கதிரியக்கத்துடன் வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் சொல்லொணா துயரம் தாங்கினர். இத் துயரத்தைக் கண்ணுற்ற பிறகும், 1945 முதல் இதுவரை உலகில் 1,28,000 அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பல்வேறு அணு ஆயுதப் படைக்கலைப்பு ஒப்பந்தங்களுக்குப் பிறகும் உலகில் ஏறத்தாழ 27,000 அணு ஆயுதங்கள் உள்ளன.
அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்பட்டவைகளில் அமெரிக்காவில் 10,104 அணு ஆயுதங்கள் உள்ளன. ரஷியா - 16,000, இங்கிலாந்து - 200, பிரான்ஸ் - 350, சீனா - 200. அணு ஆயுத நாடுகள் என அறிவிக்கப்படாத இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் மொத்தம் 110 அணு குண்டுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இஸ்ரேலில் 80 அணு ஆயுதங்கள் உள்ளன.

இவை தவிர அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படும் நிலையில் உள்ள புளுட்டோனியம் அமெரிக்காவிடம் ஏராளமாக உள்ளது. 1945 முதல் இதுவரை 2,051 அணுவெடிப்பு சோதனைகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 528 வான்வெளியில் நடத்தப்பட்டவை. இதன் மூலம் வெளியிடப்பட்ட கதிரியக்கத்தால் வரும் பல நூறு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானோர் மடிவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மெகா டன் அணு ஆயுத சோதனைக்கும் 10,000 பேர் இறப்பர் என சோவியத் விஞ்ஞானி ஆந்ரேய் சகாரவ் கணக்கிட்டுள்ளார்.
கார்பன் 14 என்ற கதிரியக்கப் பொருளை சுவாசிப்பதன் மூலம் ஏற்படும் புற்றுநோய், சாவுக்கு காரணமாக இருக்கும். இதன்படி அடுத்த சில நூறு ஆண்டுகளில் 50 லட்சம் பேர் இறக்கும் நிலை ஏற்படும். ஏனெனில் 5 அணுஆயுத நாடுகள் நடத்திய வான்வெளி சோதனையின் வெடிப்புத் திறன் 545 மெகா டன். இந் நிலையில் அமெரிக்கா நாடாளுமன்றம் முழுமையான அணுவெடிப்புச் சோதனை தடை ஒப்பந்தத்துக்கு (CTBT) இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. 1998ம் ஆண்டு அணுவெடிப்புச் சோதனை நடத்திய இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவேயில்லை.

இப் பின்னணியில் தான் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்திய அணுஆயுதங்களின் எண்ணிக்கைப் பெருக்கத்துக்கு வழிவகுக்கும் என சமாதான இயக்கங்களைச் சேர்ந்தோர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் ஏவுகணைகள் தயாரிப்பு, அணு ஆயுதம் ஏந்தும் நீர்மூழ்கிக் கப்பல் வாங்குவது, கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்குவது ஆகியவற்றை உள்ளடக்கிய இந்திய அணு ஆயுதத் திட்டத்துக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.8,000 கோடி வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஏறக்குறைய இதே அளவு நிதியைத்தான் தொடக்கக் கல்விக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் ஒதுக்கி வருகிறது.
இந் நிலையில்தான், நிதிச்சுமையைக் காரணம் காட்டி, கல்வி பெறுவதை அடிப்படை உரிமையாக்கும் அரசியல் சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை மத்திய அரசு தட்டிக்கழிக்கிறது; இப் பொறுப்பை மாநில அரசுகள் மீது சுமத்தும் வகையில் மாதிரி சட்ட முன்வடிவை சட்டமாக்குமாறு நிர்பந்தித்து வருகிறது.

ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் 1996ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி அணு ஆயுதங்கள் குறித்து தெரிவித்த கருத்து நினைவுகூரத்தக்கதாகும்.
"அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்ற அச்சுறுத்தலோ, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துதலோ, போர்கள் குறித்த சர்வதேச சட்ட விதிகளை மீறுவதாகும்; குறிப்பாக சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை மீறுவதாகும்.'

ஏற்கெனவே ஐ.நா. சபையில் சுற்றுக்கு விடப்பட்டுள்ள வரைவு அணு ஆயுத உடன்படிக்கை (Neuclear Weapons Convention) "அணு ஆயுதங்களின் மேம்பாடு, சோதனை, உற்பத்தி, இருப்பு வைத்தல், மற்ற நாடுகளுக்கு வழங்குவது, பயன்படுத்துவது அல்லது பயன்படுத்தப்படும் என அச்சுறுத்துவது' ஆகியவற்றைத் தடை செய்வதுடன் அணு ஆயுதங்களை "முற்றிலும் ஒழிப்பது' ஆகிய பிரிவுகளைக் கொண்டுள்ளது. இது குறித்த பலதரப்பு பேச்சுவார்தையை முடிவுக்கு கொண்டு வந்து உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது அவசர அவசியத் தேவையாகும்.

நன்றி- தினமணி


அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள். :)

14 comments:

My days(Gops) said...

ai naant thaaan first..

aug'6 ku ivlo matter keedha >? nice info...

floppy friendship day..........

puliodhirai undaa?

நாகை சிவா said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
:)

அனுசுயா said...

எல்லாரும் நண்பர்கள் தினம்னு சந்தோசமா கொண்டாடற நேரத்துல இந்த அணு குண்டு சமாசாரத்த எழுதியிருக்கறது வித்தியாசமாயிருக்கு. ஆனா இந்த அழிவுகள், போர் எல்லாமும் குறைய ஒரே வழி மனித நேயமும், நட்புணர்வும் மேலும் வளரனும்.

//உலகில் 1,28,000 அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன//

நிஜமாகவா? :(

Butterflies said...

Though Provoking post!!!!Nejamaave!!nalla irunthathu..but ithe articleaa naan kaalaila padichen!( neenga en posta thought provoking nu sonnathaala tit for tat nu ninachukka venaam!)

Syam said...

//இறந்தவர்களைக் கண்டு பொறாமைப்படும் அளவுக்கு கதிரியக்கத்துடன் வாழ்ந்தவர்கள்//

ஜீரனிக்க கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு....

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
:-)

Unknown said...

happy friendship day....nice info.....so future-la namakku problem iruka?

ambi said...

Good info shishya! well scripted and presented in cabtain style with exact statistics. :)
Happy F'ship day!

@subha, Tit for Tat ellam en shishyanuku enna nee theriyaathu. athellam enga gurugualthil solli kudukarathee kidayaathu! :)

said...

Belated Happy Friends Day.

Thangal varugaikku nandri nanbare.

Sasiprabha said...

Yet more atomic wepons are going to get produced from the wastages of Atomic power stations.. Because the truth is we cant destroy the atomic wastages, but we can convert it from one form to another.. A research paper was submitted to oppose the Koodangulam Atomic power project.. But it was denied on considering the requirement of power production. Avar avar thalaila mannai vaari potukkaradhunna idhudhaan.. The cancer patient ratio is increasing now a days and the reason is the radiation leakages and carbon increase in air. There is no need to use the weapons.. The radiation exists in air is enough.. For all we are enjoying, we certainly have to pay.. But thinking about next generation, they certainly loose their health very much compared to us.. Pongappa edhu edhukku thaan kavalai paduradhu.. Appuram vaalura aasiaye vittu poidum..
Happy Friendship Day..

Ram said...

Oorukku thaan upathesam panraanga intha Developed Countries lam....yenna seiyya?

Vaalzhga Vaiyagam...! Vaazhga Vazhamudan.!!!

Gayathri Chandrashekar said...

Iniya Natpu dina vaazhththukkal Gopalan!

பரத் said...

Very informative.
(Ithellaam yosichu paarthaa konjam bayama thaan irukku)

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

Ms Congeniality said...

Nice post..good statistics and facts..nuclear weapons are a threat to the world!!!

smiley said...

very interesting post and thought provoking too